KAJ

KAJ
K.Abdul Jabbar

Monday, July 12, 2010

கீழக்கரையில் தரமில்லாத மின் கம்பிகள் வீடுகளில் குறைந்த மின்னழுத்த பிரச்னை

கீழக்கரையில் உள்ள மின் பாதையில் செல்லும் தரமில்லாத மின் கம்பி காரணமாக வீடுகளுக்கு குறைந்தழுத்த மின் சப்ளை கிடைப்பதால் மக்கள் அவதியடைகின்றனர். கீழக்கரையில் ஆயிரக்கணக்கன மின் இணைப்புகள் உள்ளன.இங்குள்ள துணை மின் நிலையம் பெயரளவில் உள்ளதே தவிர, கூடுதல் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படவில்லை. பல்வேறு இடங்களில் உள்ள மின்கம்பிகள் அனைத்தும் அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. தரமில்லாத கம்பிகளால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். சீரான அழுத்தம் கிடைக் காததால் மின் சாதன பொருட்களை வீடுகளில் பயன்படுத்த மக்கள் அச்சமடைகின்றனர்.மின் விசிறிகள் குறைந்த வேகத்தில் சுழல்வதால் இரவு நேரங்களில் குழந் தைகள் தூங்கமுடியாமல் தவிக்கின்றனர்.இப்பிரச்னையை தீர்ப்பதில் மின் வாரிய அதிகாரிகளும் மெத்தனமாக இருந்து வருகின்றனர். மின் கம்பங்களில் உள்ள வயர்கள் சிலந்தி கூடு போல் காணப்படுகிறது. சீதக்காதி சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் தூண்களில் சிமென்ட் அரிக்கப் பட்டு அபாய நிலையில் உள்ளது. தெருக்களில் உள்ள பல மின் கம்பங்கள் சாய்ந்து விழக்கூடிய நிலையில் உள்ளது.தாமதமாக பணம் செலுத்தினால் ஆர்வத்துடன் அபராதம் வசூலிக்கும் மின்சார துறை ,மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கவும் அக்கறை செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment