KAJ

KAJ
K.Abdul Jabbar

Sunday, July 4, 2010

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு எதிரொலி கீழக்கரையில் குடம் குடிநீர் நான்கு ரூபாய்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு எதிரொலியாக கீழக்கரையில் லாரிகளில் விற்பனை செய்யப்படும் குடிநீர் நான்கு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.கீழக்கரை பகுதியில் நிலத்தடி நீர் உப்புத்தன்மையுடன் இருப்பதால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் நீரிலும் உப்பு தன்மை அதிகரித்து சுவை குறைந்துள்ளது.இதை தொடர்ந்து உச்சிப்புளி,இருமேனி,பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள குடிநீர் கிணறுகளில் லாரியில் நீர் எடுத்து வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் வரை குடம் 3.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 50 காசு அதிகரிக்கப்பட்டு நான்கு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் லாரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். பல்வேறு கிராமங்களில் தேவையற்ற இடங்களில் குளங்கள் வெட்டப்பட்டு அரசின் நிதியை பாழாக்குவதை தவிர்த்து, சுத்தம் செய்யப்படாமல்,மூடப்படாத நிலையில் உள்ள குடிநீர் கிணறுகளை தூர் வார வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 166 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ள உள்ள காவிரி நீர் வழங்குவதற்கான திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் துவங்க வேண்டும்.மாவட்ட நிர்வாகமும் கீழக்கரை மக்களின் குடிநீர் சிரமத்தை கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment