ராமநாதபுரம் டாக்டர் வீட்டில் நடந்த "மெகா' திருட்டு சம்பவத்தில், 468 பவுன் நகை மீட்கப்பட்டது. இதில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ,ஐந்து பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் பாரதிநகர் சேட் இப்ராஹிம் நகரில் வசித்து வரும் டாக்டர் கியாவுதீன் மகள் அகமது பசிகா வீட்டில், கடந்த 2009 அக்.,22 இரவில் 500 பவுன் தங்க நகைகள் திருட்டுபோனது. சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. தேனி மாவட்டம் ஓடப்பட்டி கணேசன் உறவினர் பாரத்குமாரை கைது செய்து ,அவரிடமிருந்து 40 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இவரது தகவல்படி ராமநாதபுரம் அருகே தெற்குத்தரவை சேர்ந்த முகமது அனீஸ்(28) என்பவரை விசாரித்ததில் ,தெற்குத்தரவை வடக்குத்தெருவை சேர்ந்த பரீத் அகமது, பால்கரையை சேர்ந்த தொப்பி ராமச்சந்திரன் ஆகியோரிடமிருந்து 415 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் டாக்டர் கியாவுதீன் மகள் வீட்டில் திருடப்பட்டது .
பிரதீப்குமார் எஸ்.பி., கூறியதாவது: பெரிய அளவில் நடந்த திருட்டு என்பதால் இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையை நாங்கள் வேறு எந்த பணிக்கும் பயன்படுத்தவில்லை. குறிப்பிட்ட அளவு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஏழு பேர் குற்றவாளிகளாக உள்ளனர். பாரத்குமார், அனீஸ் தவிர மற்றவர்களை தேடிவருகிறோம், என்றார்.
ரூ.100க்கு ஒரு பவுன்: எதிர்பாராத விதமாக சிக்கிய இந்த நகைகளின் எண்ணிக்கை அனீஷிற்கு மிதப்பை தந்தது. எதற்கெடுத்தாலும் நகைகளை எடுத்து புழக்கத்தில் விட்டுள்ளார். பெண்களிடம் பந்தா செய்வதற்காக ஒரு பவுன் நகையை 100 ரூபாய்க்கு விற்ற சம்பவமும் நடந்துள்ளது. வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்கு கூட நகையை பயன்படுத்தியுள்ளார். இவை அனைத்தும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
விபத்தால் தகர்ந்த அடுத்த "டார்க்கெட்': டாக்டர் வீட்டில் கிடைத்த நகையால் , பெரிய திருட்டில் மட்டுமே ஈடுபட வேண்டும் என முடிவு செய்த அனிஷின் அடுத்த டார்கெட், ராமநாதபுரம் "தங்கமயில்' ஜூவல்லரியாக இருந்தது. நத்தத்தில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சென்ற போது, சாலை விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது.இதனால் அவனது "டார்க்கெட்' தாமதமானது.
No comments:
Post a Comment