KAJ

KAJ
K.Abdul Jabbar

Wednesday, June 30, 2010

செய்யது ஹமீதா கல்லூரியில் ராகிங் தடுப்பு கமிட்டி கூட்டம்

கல்லூரிகளில் நடைபெறும் ராகிங்கை தடுக்கும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் கமிட்டி அமைக்கப்படவேண்டும் என சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டதின் படி, காரைக்குடி அழகப்பா பல்கலை கழகம் உத்தரவை தொடர்ந்து, கீழக்கரை செய்யது ஹமீதா கலைக் கல்லூரியில் 42 பேர் கொண்ட ராகிங் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. முதல்வர் அபுல் ஹசன் சாதலி பேசியதாவது: கல்லூரியில் ராகிங் போன்ற சம்பவங்கள் நடந்தால் அது குறித்து விசாரிக்கவும்,தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பேராசிரியர், போலீஸ் உள்ளிட்ட பல குழு கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது, என்றார். பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தங்கதுரை, பி.ஏ.டி.,அமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சந்தானம்,மாயாகுளம் ஊராட்சி தலைவர்(பொறுப்பு) சிவா,மாணவர்கள் சஹிர்தீன்,பாரதி கண்ணன் மற்றும் பலர் பேசினர் .பேராசிரியர் அப்துல் சத்தார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment