KAJ

KAJ
K.Abdul Jabbar

Friday, June 18, 2010

ஏர்வாடியில் வாந்தி, பேதிக்கு 2 பேர் பலி-பலர் மருத்துவமனையில்அனுமதி

ஏர்வாடி: ஏர்வாடியில் திடீர் வாந்தி பேதிக்கு 2 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏர்வாடி டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கட்டளைதெரு, கோவில் வாசல் தெருக்களை சேர்ந்த ஒரு சிலருக்கு நேற்று திடீரென வாந்தி பேதி ஏற்பட்டது. உடனே அவர்கள் ஏர்வாடியிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் லட்சுமி நரசிங்கரபுரம், முகைதீன் பள்ளிவாசல் தெரு, ரேசையாபுரம், ஆர்சி கம்பவுண்ட், ஷாஜகான் தெரு, பொத்தைய தெருவை சேர்ந்தவர்களுக்கும் திடீரென்று வாந்தி பேதி ஏற்பட்டது.

அப்பகுதியை சேர்ந்த மேரி, முகைதீன் பிச்சை, சுஜீத்குமார், ஆவுடையப்பன், காஜா மூகைதீன், மிக்கேல், காஜா, செய்யது, சீதாராமன், சுரேஷ், ஆலுராம், ரசுல் பீவி, சொர்ணம், பீர் பாத்திமா, எவர்லீன், சண்முகலெட்சுமி, பானு, அப்சரா, பாமா, அமீர்ஜான், ரம்யா, வள்ளியம்மாள் உள்பட பலர் ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அதில் மேரி, முகைதீன் பிச்சை ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

No comments:

Post a Comment