KAJ

KAJ
K.Abdul Jabbar

Wednesday, June 16, 2010

டெலிபோன் பழுதால் அவதி !

கீழக்கரையில் அடிக்கடி டெலிபோன் இணைப்பு துண்டிக்கப்படுவதால் மக்களும், வியாபாரிகளும் பெரும் அவதியடைகின்றனர். கீழக்கரையில் இரண்டு ஆயிரத்திற்கும் அதிகமான டெலிபோன் இணைப்புகள் உள்ளன. தரைவழி தொடர்பு இணைப்பை பல் வேறு பணிகளுக்காக வியாபாரிகள், பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாள் தோறும் பல்வேறு இடங்களில் இணைப்புகள் பழுதாகி விடும் நிலையில் உள்ளது. புகார் தெரிவித்தாலும் உடனுக்குடன் பழுது நீக்கம் செய்வது கிடையாது.இதனால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஊழியர்கள் பற்றாக்குறை எனக்கூறி நாட்களை கடத்துகின்றனர். தனியார் நிறுவனத்தினர் பல்வேறு சலுகைகளுடன் புதிய வாடிக்கையாளர்களை பெற முயற்சித்து வருகின்றனர். பி.எஸ்.என்.எல்., டெலிபோன் துறை ஊழியர்களின் பழுது நீக்க தாமதத்தால் மேலும் ஏராளமானோர் இணைப்பை ரத்து செய்து விட முடிவு செய்துள்ளனர். இங்குள்ள உயர் அதிகாரிகளிடத்தில் புகார் செய்ய செல்போனை தொடர் கொண்டால் பதிலளிப்பதே கிடையாது. பல்வேறு நாட்களில் ஒன்வே டிராபிக்காக டெலிபோன் இயங்கி வருகிறது.இதே நிலையில் பிராட் பேண்ட் இணைப்பும் இயங்கி வருகிறது.நிரந்தர தீர்வு காண துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment