KAJ

KAJ
K.Abdul Jabbar

Tuesday, June 29, 2010

கீழக்கரை டி.எஸ்.பி., அலுவலகம் திருப்புல்லாணிக்கு மாற்ற முடிவு : மக்கள் அதிர்ச்சி

கீழக்கரை: கீழக்கரை டி.எஸ்.பி., அலுவலகத்தை திருப்புல் லாணிக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர். கீழக்கரையில் 1994 ஜன., 17ம் தேதி டி.எஸ்.பி.,அலுவலகம் துவங்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக சொந்த கட்டடம் இல்லாததால் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. கீழக்கரை, திருப்புல் லாணி, ஏர்வாடி, திருஉத்தரகோசமங்கை, சாயல்குடி, சிக்கல், வாலிநோக்கம் ஆகிய ஆறு போலீஸ் ஸ்டேஷன்களின் தலைமையிடமாக விளங்கி வருகிறது. இந்த பகுதி மக்களின் மையப் பகுதியாக கீழக்கரை விளங்குவதால் மக்கள், வழக்கு, புகார் மற்றும் பல்வேறு பிரச்னைகளுக்கு எளிதாக டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்து சென்றனர்.நடப்பாண்டில் கீழக் கரை தாலுகாவாக மாற்றப் பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளதால் பல்வேறு அரசு அலுவலகங்களை மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந் நிலையில் டி.எஸ்.பி., புதிய அலுவலகம் கட்ட கீழக்கரையில் இடம் கிடைக்காதால் திருப்புல்லாணிக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படுகிறது. போலீஸ் தரப்பில் கூறியதாவது: கீழக்கரையில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் டி.எஸ்.பி., அலுவலகம் போதுமான வசதிகள் இல்லாததால் தொடர்ந்து இயங்கமுடியாத நிலை உள்ளது. திருப்புல்லாணியில் கட்டடம் கட்ட தேவையான நிலம் உள்ளதால், அங்கு டி.எஸ்.பி., அலுவலகம் கட்டுவதற்கான திட்டம் தயார் நிலையில் உள்ளது, என்றனர்.

No comments:

Post a Comment