KAJ

KAJ
K.Abdul Jabbar

Thursday, June 24, 2010

தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்கவிழா

கீழக்கரை தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்கவிழா கல்லூரி வளாகத்தில் முதல்வர் சுமையா தலைமையில் நடந்தது. மாணவி பாத்திமா கிராத் ஓதினார். பேரவையின் ஆலோசகர் தாஜ்நிஸா பேகம் வரவேற்றார். மாணவியர் பேரவையின் புதிய நிர்வாகிகள் தலைவி ரபியா மகுசூமா தலைமையில் உறுதி மொழி எடுத்தனர். தலைவராக ரபியா மகுசூமா, உதவி தலைவராக பரீதாபானு,பொதுசெயலாளராக அகமது முஹ்பிதா, இணை செயலாளராக ஹூசைனியா, துறை செயலாளர்களாக குத்புசியா பேகம், திவ்னம்மாள், அமீரா ஹாஜா, அனீஸ் பாத்திமா, ஷிபானா, சிந்து பிரியா, சகானா பாத்திமா, முகம்மது ஹஸிபா, சுபா, சாலிஹா பாத்திமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதயம் குரூப் ஆப் கம்பெனிஸ் சி.இ.ஓ., முத்து மாணவிகளின் கல்வி முன்னேற்றத் திற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

No comments:

Post a Comment